விவேகானந்த பூங்கா திறப்பு விழா – 25.08.2024

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்கா 2024.08.25 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு உலகலாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் தலைவர் அதி வணக்கத்திற்குரிய ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ் அவர்களின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் பிரதம அதிதியாக தஞ்சாவூர் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தஜி மஹராஜ் மற்றும் ஆன்மீக அதிதிகளாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மஹராஜ் மற்றும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானந்தஜி மஹராஜ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தஜி மஹராஜ், மற்றும் திருவண்ணாமலை ராமகிருஷ்ண ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி மாத்ருசேவனாந்தர் ஆகிய சுவாமிஜிகளின் நேரடி ஆசியுடன் ஐயனார் ஆலயத்திலிருந்து அனைவரும் மேள வாத்தியங்கள் இசைக்க சிறுவர் சிறுமிகளின் கோலாட்டங்களுடன் வரவேற்கப்பட்டு பூங்கா வரையிலான நடைபவனி இடம்பெற்று 30 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை மற்றும் நினைவுக்கல் சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் சேவையின் நினைவுச் சின்னமாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் , சுவாமி ஜீவானந்தஜி, சுவாமி நடராஜானந்தஜி, சகோதரி நிவேதிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டதோடு ஏனைய துறவிகளின் பெயர்களைத் தாங்கிய 10 இல்லங்களோடு
விவேகானந்த பூங்கா இனிதே திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கிரான்குளம் சீமூன் மண்டபத்தில் விவேகானந்த பூங்காவிற்கான நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டதோடு ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் உயரிய விருதாகிய “விவேகானந்த விருது” வழங்கப்பட்டு சுவாமிஜிகளால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே விவேகானந்த பூங்காவின் நன்கொடையாளர்கள் மற்றும் விபரங்களை உள்ளடக்கிய “விஸ்வரூபம்” நினைவு மலர் வெளியீடு இடம்பெற்றமை சிறப்பானதாகும்.

இவ் விழாவில் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர்.பேராசிரியர்.மா.செல்வராஜா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம், ஸ்ரீ சத்ய சாயி சஞ்ஜீவனி வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் பேராசிரியர் வைத்தியகலாநிதி திரு.தி.சுந்தரேசன் மற்றும் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தட்சணாமூர்த்தி, பொலிஸ்நிலையம் காத்தான்குடி பொறுப்பதிகாரி திரு.எஸ்.பி.கஜநாயக்க, மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு.யோ.சர்வேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சி.சிவகுமார், பதுளை மலையக சிறுமிகள் இல்லத் தலைவர் திரு.R.M.கிருஷ்ணசாமி உட்பட கௌரவ அதிதிகளாக நன்கொடையாளர்களும், அழைப்பு அதிதிகளாக பல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபைத் தலைவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் பிரசன்னத்துடன் எமது அமைப்புகளின் பணிப்பாளர்கள், முகாமையாளர்கள், இணைப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள், விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்கள், முல்லைதீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவிகள், திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்ல மாணவிகள், திருப்பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல மாணவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் மாணவ மாணவிகள் உள்ளடங்கலாக விவேகானந்த குடும்பத்தினரும் இணைந்து சிறப்பான முறையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக நலன்புரி அமைப்பின் ஒரு செயற்பாடாக திறந்து வைக்கப்பட்ட எமது விவேகானந்த பூங்காவானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த ஒரு தடமாகவும் காலத்தால் அழியாத நிர்மாணிப்பாகவும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *